Tuesday, August 18, 2009

அவர்களை ஏன் வெறுக்கிறாய்....



அவர்களுக்கு இப்போது தேவை...
அன்பும் அரவணைப்பும்...
வெறுப்பும் வெறுமையும் அல்ல...

அவர்களுக்கு தேவை
சாய்ந்து கொள்ள தோல்...
காயப்படுத்தும் வார்த்தைகள் அல்ல...

அவர்களை தொட்டால் ஒட்டிவிடாது ...
அவர்களிடம் பேசினால் பற்றிவிடாது ...

அவர்களை நீ
கட்டி தழுவ தேவை இல்லை ..
பத்தடி தள்ளி போகாமல் இரு ...

ஏய் மனிதா உனக்கு தெரியும்
அவர்கள் ஒவ்வொரு வினாடியும்
உடலால் செத்துக்கொண்டு
இருக்கிறார்கள்...

நீ
அவர்களின் மனதையும்
சாகடிக்காதே...
உன் வார்த்தைகளால்..

வாருங்கள் தோழர்களே ...
அவர்களை அரவணைப்போம்
கைகொடுப்போம்...